பழமையான எண் வடிவ யந்திரம்
300 ஆண்டுகள் பழமையான எண் வடிவ யந்திரம் அன்மையில் பழனி, திருஆவினங்குடி திருக்கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள சாந்தகுல சவுமிய நாராயண கவரய நாயக்கமார் மண்டபத்திலுள்ள யந்திரம் ஒன்றைப் பற்றி அம்மண்டப நிர்வாகி பாலகிருட்டிணன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி, பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி பேராசியர்கள் அசோகன், கோபால கிருட்டிணன், தபதி கார்த்திக் ஆகியோரால் 300 ஆண்டுகளுக்கு பழமையான எண் வடிவ யந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட செய்தி தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தியின் தன்னலமற்ற சேவையும் இத்தகைய அரிய செய்திகளை தினமலர் நாளிதழ் தொடர்ந்து வெளிடுவதும் பாராட்டுதலுக்குரிய செயல்களாகும். வெளி எனும் பிரபஞ்சத்தைக் குறிக்கும் சதுர வடிவில், சிற்பக்கலையில் ஒன்பது கட்டங்கள் கொண்ட பீதா எனும் வரைப்படத்தில் வித்தை எனும் அறிவைக் குறிக்கும் வகையில் பூமியின் திசைகளான வடக்கில் எண் 7, கிழக்கில் எண் 1, தெற்கில் எண் 3, மேற்கில் எண் 9 எனவும் சோதிகளின் திசைகளாள நீரைக் குறிக்கும் வடகிழக்கில் எண் 6, நெருப்பைக் குறிக்கும